மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு அருகே தீப்பற்றிய கப்பலில் ஆபத்தான பொருட்கள்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ நேற்று மாலை அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா, இந்திய கடற்படைகள் தெரிவித்துள்ளன.

மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வழமைக்குத் திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீயை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது.