மேலும்

பிரிவு: செய்திகள்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு காலமானார்

யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளரான எஸ்.கதிரவேலு நேற்று, தனது 83ஆவது வயதில் அகால மரணமானார்.

கோத்தாவைப் பாதுகாக்கும் அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குமா?

கோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?

ஐ.நா குழுவைச் சந்தித்தோருக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா அரசு விசாரிக்கும் என்கிறார் மங்கள

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிடம் சாட்சியமளித்தோர், அச்சுறுத்தப்பட்டதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளக முரண்பாடுகளை ஊடகங்களில் பேசும் தருணம் இதுவல்ல – மாவை சேனாதிராசா

உள்ளக முரண்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கப்படுத்தி விவாதிப்பதைக் கைவிடுமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாமைக் கண்டுபிடித்ததாக ஐ.நா குழு அறிவிப்பு

திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா, சிறிலங்காவுக்கான பயணத்தை தொடங்கினார் சமந்தா பவர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின்  நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது

சிறிலங்காவுக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்து தமது பயணம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

துறைசார் வல்லுனர் குழுக்களை அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘புலிகளின் ஆதரவாளர் சமந்தா பவருக்கு சிறிலங்காவில் என்ன வேலை?’ – கம்மன்பில கேள்வி

அமெரிக்காவிலும், ஐ.நாவிலுமே கடமையைக் கொண்டிருக்கும், சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.