மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

500 இராணுவத்தினரைக் கொண்ட மகிந்தவின் பாதுகாப்பு அணியை விலக்க மைத்திரி உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த- 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

விமானங்களுக்குள் தஞ்சமடைந்த பாம்புகள் – சென்னை விமான நிலையம் திறக்கப்படுவது தாமதம்

பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகருக்கான விமான சேவைகள் வரும் 8ஆம் நாள் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.

சந்திரிகாவுக்கும் இலஞ்சம் கொடுக்க முயன்ற அவன்ட் கார்ட் நிறுவனம்

அவன்ட் கார்ட் நிறுவனம் தனக்கும் இலஞ்சம் தர முன்வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் உதவின – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு

இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய  மூத்த இராணுவ அதிகாரிகள்  பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

நௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம்

சிறிலங்காவுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், சிறிலங்கா இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.