மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

உயர்மட்டப் பேச்சுக்களுக்காக சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே அடுத்தமாதம் முதல் வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்த நிராகரித்த ஐ.நா பிரகடனத்தில் மைத்திரி அரசு கையெழுத்து

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்படுவதில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பது தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்காவும் கையெழுத்திடவுள்ளது.

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டவரை விடுவிப்பதற்கும் சரத் பொன்சேகா ஆதரவு

தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் என்று கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை, விடுவிப்பதற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சிங்கப்பூரில் இருந்து மன்னார் திரும்பினார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்துக்குத் திரும்பினார்.

சிறிலங்கா ஆயுதப்படைகளை மறுசீரமைப்பதை பிரித்தானியா கண்காணிப்பது ஆபத்தானது – பீரிஸ்

சிறிலங்கா ஆயுதப்படைகளை தரமுயர்த்துவதற்கு, 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரித்தானியா, இதனைக் கண்காணிக்க புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமிக்கவுள்ளமை,  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் சீபா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது – ரணில் அறிவிப்பு

இந்தியாவுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மேஜர் உள்ளிட்ட மேலும் இரு புலனாய்வு அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொறுப்புக்கூறல்: சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா முடிவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.

போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு – ருவான் விஜேவர்த்தன தகவல்

சிறிலங்கா படைகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.