ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள சமரவீர
உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி, அதிலிருந்து தரவுகளை அழித்து, சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போர் எச்சரிக்கை விடுத்த குற்றச்சாட்டில், 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இறப்பர் களஞ்சியத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டை பிளவுபடுத்துவதையோ, இன்னொரு போரையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் அனுமதியின்றி பௌத்த விகாரைகள் கட்டப்படுவது மற்றும் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது குறித்தும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளது.
வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற திட்டம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.
புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.
திருகோணமலையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா படையினரின் வசமுள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.