மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலைகளை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவிடம் 700 கோடி ரூபாவுக்கு தொடருந்துகளை வாங்குகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து 10 தொடருந்து இயந்திரங்களையும், 6 டீசல் தொடருந்து தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.

குமார் குணரட்ணம் விடுதலை

முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரட்ணம், இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறைச்சாலைக்கு வெளியே வரவேற்று அழைத்துச் சென்றனர்.

சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழைப்பு – புதிய துணை அதிபர் பென்ஸ் தொலைபேசியில் பேசினார்

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரிக்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது புதிய உள்நாட்டு விமான சேவை

தனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா மக்களின் வரிப்பணத்தை அமெரிக்காவில் இருந்தபடி ஏப்பம்விட்ட கோத்தாவின் மகன்

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக சீனா கடும் நிலைப்பாடு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக, கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சிறிலங்காவின் பெயரைக் கெடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை மிரட்டும் நடா புயல் – யாழ். குடாநாடு தப்புமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று வடக்காக, வடமேற்குத் திசையில் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் பரப்பளவு குறைந்திருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.