மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி நகர உடன்பாடு குறித்து சீனாவுடன் மீண்டும் பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட துறைமுக நகர மற்றும் நிதி நகர உடன்பாடு தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தலில் தனக்கு தொடர்பில்லையாம் – கோத்தா கூறுகிறார்.

‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மறுத்த சிங்கப்பூர்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, தனியான பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று ஓய்வுபெறுகிறார் நீதியரசர் சிறிபவன் – புதிய தலைமை நீதியரசர் யார்?

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் கே.சிறிபவன் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (பெப்ரவரி 28) ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது – ஐ.நா, மேற்குலக தலைவர்களுக்கு மைத்திரி அறிவிப்பு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க நாடாளுமன்றக் குழு சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அடுத்தடுத்து சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

ஆயுதங்களை வழங்காவிடினும் முக்கிய உதவியை வழங்கியது இந்தியா – கோத்தா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரதானமாக சீனாவின் ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டாலும், சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை பெரும்பாலும் இந்தியாவே வழங்கியது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீன உயர்மட்டக் குழு சிறிலங்கா அதிபர், பிரதமருடன் சந்திப்பு

சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசாங்க உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.