மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவுக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் வீழ்ச்சி

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா சுற்றுலா அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள்? – கோத்தாவிடம் கடிந்த அனுநாயக்க தேரர்

பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கின் பிரதான சுற்றுலா கேந்திரமாக மாறுகிறது மன்னார்

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இனிமேல் எதேச்சாதிகார, இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இனிமேல் எதேச்சாதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

சீனாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சீன வங்கி  (Bank of China), கொழும்பில் கிளை ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்கள் திருட்டு – முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பாணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி எடுத்து பழைய இரும்பாக விற்பனை செய்த மோசடி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கும் சட்டமூலம் விலக்கப்பட்டது ஏன்?- மகிந்த சமரசிங்க

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம், மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றார் கபில வைத்தியரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, கபில வைத்தியரத்ன நேற்று பாதுகாப்பு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று  மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.