மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு தலைமை கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை போதிய செயற்திறனின்றி இருப்பதாகவும், அவர்கள் கண்ணாடியில் தம்மைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மைத்திரி- ரணில் இடையே புரிந்துணர்வு உடன்பாடு – அதன் பின்னரே அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தொடர்பாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது.

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடக்காது

வரும் மே 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.

இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை

சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது

வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி வெளியேறியுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.