மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்றாகப் பயணிக்க வேண்டாம்- மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

வரும் வாரங்களில், நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தாக்குதல்களுடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு – சிறிலங்கா தளபதியின் பெயரில் பாகிஸ்தான் குசும்பு

பாகிஸ்தானைத் தளமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவ ஆதரவு கீச்சகப் பதிவர்கள், போலியான சிறிலங்கா கீச்சக கணக்குகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இராணுவ சீருடையில் 5 இலக்குகளை தாக்க திட்டம் – பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை

தெமட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முடிவு செய்ய மரபணுச் சோதனை நடத்தப்படவுள்ளது.

பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டி – 100 வீதம் உறுதி என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது

கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில்,  இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.