மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

சிறிலங்காவில் சீனாவின் உறவைப் பலப்படுத்தும் ‘நீர் வழங்கல் திட்டம்’

சீனா தனது ‘மென்மையான அதிகாரத்தைப்’ பயன்படுத்தி கொழும்புடன் தனது உறவை மேலும் ஆழமாக்குவதற்காக தற்போது சிறிலங்காவில் மிகப் பெரிய நீர் வழங்கல் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?

சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார்.

‘பாப்பரசர் சிறிலங்காவுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்’ – சிறிலங்கா வாழ் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் வேண்டுகோள்

“சிறிலங்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களின் பின்னர் பாப்பரசர் அவர்கள் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சிறிலங்கா அரசாங்கமானது இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுடன், மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு பாப்பரசர் அவர்கள் தனது ஆதரவை வழங்குவதாக பரப்புரை மேற்கொள்வதால் இந்தப் பயணத்தைப் பிற்போடவேண்டும்”

‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சிறிலங்காவில் வளர்ந்துவரும் ஏழ்மையும் தேர்தல் ஒன்றுக்கான ஆயத்தங்களும்

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகர் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் போன்றன வக்விற்ற போன்ற சாதாரண மக்களை எரிச்சலுக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

‘சிறிலங்கா அதிபர் அவர்களே உங்கள் பற்றிய கோப்புகள் எம்மிடமும் உள்ளன’

இந்த நாட்டில் நடந்த உண்மைகளைப் பொய்கள் மறைத்திருக்கலாம். ஆனால் இது நீண்ட காலம் நிலைத்திருக்காது. சிறிலங்காவின் பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டின் அழிவுக்கும் பொதுச் சொத்துக்களை ஊறுவிளைவித்தமைக்கும் காரணமாக இருக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

சிறிலங்கா அரசு நடத்திய உள்நாட்டுப் போர்முறை மத்திய கிழக்குக்கு பொருந்துமா?

ஆயுதக் குழுவொன்றை முற்றாக அழிப்பதன் மூலமோ அல்லது இராணுவ வெற்றியை நிலைநாட்டுவதன் மூலமோ வெற்றிகொள்ளப்படும் எந்தவொரு யுத்தமும் ஒரு ஆட்சியை சிறந்த வழியில் நடாத்துவதற்கான வழியாக இருக்காது.

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’

டொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் அகதிகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்

அகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.