மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

ராஜபக்சவின் மீள்வருகை – சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பம்

பத்து ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமையானது சிறிலங்காவின் அரசியலில் திருப்பம் ஒன்று ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும்.

நல்லிணக்கம் சிறிலங்காவின் போர்க்காயங்களை குணப்படுத்துமா?

25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக கடந்த மாதம் தனது சொந்தக் காணிக்குச் சென்ற பரமேஸ்வரி உதயகுமாரன் மிகவும் அதிர்ச்சியுற்றார். பரமேஸ்வரியின் சொந்த இடம் பளை வீமன்காமம். இவரது வீட்டில் எவ்வித தளபாடங்களும் காணப்படவில்லை.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – தடுமாறும் மைத்திரி

1994ல் பொதுத் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது, சந்திரிகா குமாரதுங்க இரகசிய இடத்தில் மறைந்திருந்தார். இத்தேர்தல் பெறுபேறால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கருதினார். இவரது விசுவாசிகள் மாத்திரமே இவர் தங்கியிருந்த இரகசிய இடத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மிருசுவில் படுகொலைகள் – நடந்தது என்ன?

‘பதினைந்து ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இருப்பினும் இறுதியில் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கதிரன் ஞானச்சந்திரனின் மனைவியும் ஞானச்சந்திரன் சாந்தனின் தாயுமான ஞானச்சந்திரன் பரமேஸ்வரி தெரிவித்தார்.

போரில் கணவனை இழந்த பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் அவலம் – ஏஎவ்பி

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போரின் போது தமது கணவன்மாரை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை.

எவராலும் கருத்தில் கொள்ளப்படாத புலம்பெயர் மக்களின் உரிமைகள் – பிரான்செஸ் ஹரிசன்

சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை.

வெளிநாடுகளுக்கு சீனா வழங்கும் கடன்களின் பின்னணி

புராதன ‘பட்டுப்பாதை’யை  தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சீனா ‘ஒரு அணை மற்றும் ஒரு பாதை’ என்கின்ற திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புராதன ‘பட்டுப்பாதை’ திட்டத்தின்  கீழ் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

மைத்திரி அரசிடம் வடக்கு மக்கள் எழுப்பும் கேள்வி

கஸ்தூரி உதயகுமாரியின் குடும்பத்தினர் 1990ல் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்லிப்பளை 1990ல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னர் அந்தக் கிராமம் மிகவும் அமைதி நிறைந்ததாகக் காணப்பட்டது.

பதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்க அமெரிக்கா ஏன் உதவுகிறது?

சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீளத் தொடங்குவதற்கு இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் தனது எதிர்ப்பைக் காண்பித்துள்ளது. எனினும், சீனா தொடர்ந்தும் இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.