மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவுடன் நீண்டகால எரிசக்தி உடன்பாட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா

சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு  வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பு அவசியம்- மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா

நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக,  கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவைக் குற்றம்சாட்டுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்துக்கு தென்கொரியாவில் விருது

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

றீகனின் தூதுவரால் முடியாததை ட்ரம்பின் தூதுவர் சாதிப்பாரா?

1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்த்தன பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன், தனது சிறப்புத் தூதுவர் வேர்னோன் வோல்டர்ஸை (Vernon Walters)  சிறிலங்காவுக்கு அனுப்பினார்.

மின் உற்பத்திக்கான எரிபொருளை இந்தியாவிடம் கோரியது சிறிலங்கா

மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை  வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின்  விடுதலையை ரத்து செய்துள்ள   மேன்முறையீட்டு நீதிமன்றம்  புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷாவின், சிறிலங்காவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க இணங்கியுள்ளார்.

போர் விமானங்களுக்கு சிறிலங்கா அனுமதி மறுப்பு – அமெரிக்க தூதரகம் நழுவல்

அமெரிக்க போர் விமானங்களைத் தரையிறக்குவதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்தது தொடர்பான கேள்விக்கு,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிப்பதை தவிர்த்துள்ளது.

எண்ணெய் வழங்க முன்வந்த ஈரான் – சிறிலங்கா நிராகரிப்பு

ஈரான் வழங்க முன்வந்துள்ள எரிபொருள் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதிருப்பதாக  சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.