மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் Harusame என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன

சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று பதவியேற்றுள்ளார்.

சிறிலங்கா அரச புலனாய்வு சேவை தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி

சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ்  மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று புதுடெல்லி பறக்கிறார் கோத்தா – நாளை முக்கிய சந்திப்புகள் ஏற்பாடு

சிறிலங்கா அதிபர் கோத்தபய ராஜபக்ச இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழையத் தடை

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடை செய்யும் நோக்கில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு, நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திட இணங்கவில்லை – தினேஸ் குணவர்த்தன

எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கம், இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தை மேற்கோள்காட்டி பரப்பப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்

இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.