மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஐ.தே.க மாநாட்டில் ஒன்று கூடும் ரணில், சஜித், மகிந்த, மைத்திரி

ஐக்கிய தேசியக்  கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணச்சுருக்கத்தில் இருந்து விடுபட்டது சிறிலங்கா பொருளாதாரம்

சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம்  1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இருந்து வெளியேறியது அவுஸ்ரேலிய நிறுவனம்

சிறிலங்காவின் எரிபொருள் சில்லறை சந்தையில் 2024 ஓகஸ்ட் மாதம், நுழைந்த அவுஸ்ரேலிய எரிசக்தி நிறுவனமான யுனைட்டெட் பெட்ரோலியம், நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.

2000க்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து புதிய விசாரணை

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கிலும் தெற்கிலும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் என்று, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை

அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் வகை கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa)  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ரணில் கைதுக்கு எதிராக வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்கள் இல்லை

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக எந்த இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எந்த எதிர்ப்பும்  தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளை நவீனமயப்படுத்த அதிபர் அனுர உத்தரவு

சிறிலங்கா ஆயுதப் படைகள் உலகின்  மிகச் சிறந்த தொழில்முறைப் படைகளில் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் குழு சிறிலங்கா வந்தது

அமெரிக்க காங்கிரசின் இருகட்சிகளின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

வழக்கு முடியும் வரை ரணிலை சிறையில் வைக்க முயன்ற சட்டமா அதிபர்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கில், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வழக்கு முடியும் வரை விளக்க மறியலில் வைப்பதற்கே சட்டமா அதிபர் திணைக்களம் முற்பட்டுள்ளது.

ரணில் வழக்கை பார்வையிட நீதிமன்றம் சென்றாரா பிரித்தானிய தூதுவர்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக்  நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.