மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

மன்னாரில் கைதான சிவகரன் பிணையில் விடுவிப்பு

மன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது

சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட, கிழக்கிற்கு சமஸ்டி கோரும் தீர்வு யோசனைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாடு சீரழிந்து போகும் – வடமாகாண முதல்வர்

நாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

ஈபிடிபியில் இருந்து வெளியேறினார் சந்திரகுமார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.

வடக்கு மாகாணசபையின் அரசியல் தீர்வு பிரேரணை ஒத்திவைப்பு

அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, வரும் 18ஆம் நாளுக்கு வடக்கு மாகாணசபை ஒத்திவைத்துள்ளது.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்பு – கிளம்பும் சந்தேகங்கள்

சாவகச்சேரி – மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி, மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை விலக்கவில்லை- யாழ். படைகளின் தளபதி

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினரின் எந்த முகாம்களும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி

இறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.