மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

உலோக வீடுகளை அமைக்கும் திட்டம் – மீள்பரிசீலனை செய்யுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த வீடற்றவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், உலோகங்களால் ஆன தயார்நிலைப் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலிகாமத்தில் 700 ஏக்கர் காணிகள் இன்று இராணுவப் பிடியில் இருந்து விடுவிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 700 ஏக்கர் காணிகள் இன்று சிறிலங்கா படையினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இன்று யாழ்ப்பாணம் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  இந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.

குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்

யாழ்.குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.நவரட்ணராஜா (வயது62) இன்று அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் மாரடைப்பினால் மரணமானார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமண விவகாரம் – ஆளுனருக்கு முதல்வர் பதிலடி

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று,  வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய சாரணர் ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான சாரணர் ஒன்றுகூடல்

சிறிலங்காவின் அனைத்து மாவட்ட சாரணர்களும் பங்கேற்கும், ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடல் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த கால உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – மங்கள சமரவீர

கடந்த கால துன்பங்களும் அவலங்களும் மீண்டும் நிகழ இடமளிக்கப்படக் கூடாது. அதற்கு, கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.