மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

இன்று சிறிலங்கா அதிபரைச் சந்திக்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாகவே சிறிலங்கா அதிபரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு நிலைமைகளை அவதானிக்க அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம் – ஆயரைச் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம்

ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆவா குழு குறித்து விசாரணை- சட்டத்தை கையில் எடுக்க விடமாட்டோம் என்கிறது காவல்துறை

சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனைக்கோட்டையில் மர்மநபர்களின் வாள்வெட்டுக்கு 3 இளைஞர்கள் காயம்

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை  செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படட அதேவேளை, நேற்றிரவு இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடமாகாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்துக்கு நீதிகோரியும் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.

மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் முற்றுகையில் சிக்கிய யாழ். மாவட்டச் செயலகம், ஆளுனர் செயலகம்

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.