மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் மாவை, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன், சரா வெற்றி – சுரேஸ் தோல்வி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னணியில் – தீவகத்திலும் ஆதிக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நடுநிலைமை – கூட்டமைப்பின் பதில் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும், அதனை விமர்சிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பேரினவாதிகளை பாதுகாக்க வந்துள்ளவர்கள் மீது எச்சரிக்கையாக இருங்கள் – மாவை கோரிக்கை

சிங்களப் பேரினவாதிகளையும் மோசடிப் பேர்வழிகளையும் பாதுகாக்க தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்க வந்துள்ளவர்கள் மீது, எமது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

சமஸ்டியை நிராகரித்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழமுடியாது – மாவை சேனாதிராசா

வடக்கு,கிழக்கு இணைந்த சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும், அரசியல்தீர்வு கிடைக்காவிட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகி விடும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா.

இந்தியா, அமெரிக்காவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, அமெரிக்காவும் இந்தியாவும், இன்னும் தெளிவானதும், காத்திரமானதுமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஏழு ஆசனங்களையும் தாருங்கள், இறுதித்தீர்வைப் பெற்றுத் தருவோம் – யாழ்ப்பாணத்தில் சம்பந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள்,  அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சம்பந்தன் – முழுமையான தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மருதனார் மடத்தில் இன்று மாலை நடந்த பரப்புரைக் கூட்டத்தில், வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 5 மணியளவில் வெளியிட்டார்.

எஞ்சிய பகுதிகளை விடுவிக்க சிறிலங்கா இராணுவம் மறுப்பு – மகிந்த கொடுத்துள்ள உற்சாகம்

வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதைகளை விடுவிப்பதற்கும், உறுதியளிக்கப்பட்ட எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கும் சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.