மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

தையிட்டியில் இரகசிய வதைமுகாம்

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு – பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.

பேராசிரியரைப் பதிலளிக்க விடாமல் செய்தியாளர்கள் மீது சீறிப் பாய்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாட்டில், பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவரைப் பதிலளிக்க விடாமல், செய்தியாளர்கள் மீது சினத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

தமிழ் மக்கள் பேரவைக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே கடமையாற்றும் என வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் தலைமையை உருவாக்கும் கூட்டம் அல்ல – கருணாநிதி பாணியில் விக்கி அறிக்கை

யாழ்ப்பாணத்தில், நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியோ, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமோ அல்ல என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி பாணியிலான கேள்வி – பதில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீளக்குடியேற்றுவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

யாழ். ஆயரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.