மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சிறிலங்காவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்த இந்தியா திட்டம் – 23 ஆயிரம் கோடி ரூபா செலவாகும்

இந்தியாவையும் சிறிலங்காவையும் தரைவழிப் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருப்பதாக இந்தியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அப்துல் கலாம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.

யாழ்ப்பாணப் பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாத மோடி – இந்திய நாளிதழ்

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது,  யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடனான உறவு வெளிப்படைத்தன்மையற்றது என்ற குற்றச்சாட்டை இந்தியா நிராகரிப்பு

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா தரப்பின் கருத்துக்களால் இந்தியா அதிருப்தி – கவலையை பரிமாறத் திட்டம்

மீனவர் விவகாரத்தில் சிறிலங்கா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்களால், இந்தியா கடும் சீற்றமடைந்துள்ளதுடன், இதுகுறித்து சிறிலங்காவுக்கு இராஜதந்திர முறைப்படி கவலையைத் தெரிவிக்கவுள்ளது.

சிறிலங்காவில் இந்தியாவின் கண்காணிப்பு ரேடர்கள் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

சிறிலங்காவில் இந்தியா கடலோரக் கண்காணிப்பு ரேடர்களையும், தன்னியக்க அடையாளப் பொறிமுறைகளையும் நிறுவியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

புனேயை விட்டுப் புறப்பட்டது சிறிலங்கா விமானம் – இந்திய அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு

பாகிஸ்தானில் இருந்து குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலையில், புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, இந்திய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

புனேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா விமானப்படை விமானம்

சிறிலங்கா இராணுவத்தினருக்கான குதிரைகளை, பாகிஸ்தானில் இருந்து ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின், சி-130 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

சிறிலங்காவில் அரசியல்தீர்வுக்கு ஏற்ற சூழல் – தமிழ்நாட்டு கட்சிகள் குழப்பக் கூடாது என்கிறார் மோடி

சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

சிறிலங்கா பயணத்தை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தைப் பிற்போட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.