முருகன், சாந்தன், பேரறிவாளன் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டது சரியே – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சற்று முன்னர் தள்ளுபடி செய்துள்ளது.



