மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்குப் போட்டியாக இந்தியாவின் பருத்திப் பாதை திட்டம்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை இணைத்து சீனா உருவாக்க எத்தனிக்கும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தைத் தோற்கடிக்க, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளை உள்ளடக்கிய பருத்திப் பாதை திட்டத்தை உருவாக்க இந்தியாவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ராஜபக்ச பதுக்கியுள்ள 2 பில்லியன் டொலரை கண்டுபிடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உதவி

டுபாயில் உள்ள வங்கியில் ராஜபக்ச குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணம் தொடர்பான விசாரணைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் உதவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் சீன இராணுவத் தளம் இல்லை – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

இளவாலையில் மோடியின் பாதுகாப்பு வளையம் ஊடறுப்பு – இந்திய அரசு உயர்மட்ட விசாரணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவருக்கான பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் உள்நுழைந்த சம்பவம் தொடர்பாக, இந்திய அரசாங்கம் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா

சீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

இந்திய பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரம் – பொன்சேகாவும் பங்கேற்கிறார்

தீவிரவாதம் குறித்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், விடுதலைப் புலிகள் குறித்த விவகாரமும், ஆய்வுக்குரிய விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும்படி சிறிலங்காவிடம் வலியுறுத்தினார் மோடி- சுஸ்மா தகவல்

விரைவாகவும், முழுமையாகவும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதற்கு அப்பால் செல்வதன் மூலமும், சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்

இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.