மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

நேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை

நேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பொறுப்பேற்றார் புகழ்பெற்ற நாவலாசிரியர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நேற்று பதவியேற்றார்.

இந்தியப்படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது கொள்கை ரீதியான தவறு – ஜெனரல் வி.கே.சிங்

சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு வருகை நுழைவிசைவு வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு எதிராக சிறிலங்காவுடன் கைகோர்க்கும் இந்தியா

சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் தலையீடுகள் தொடர்பாக, சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகளுடன் இந்தியப் புலனாய்வு அமைப்புகள், பேச்சுக்களை நடத்தவுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்

இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்குப் போட்டியாக இந்தியாவின் பருத்திப் பாதை திட்டம்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை இணைத்து சீனா உருவாக்க எத்தனிக்கும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தைத் தோற்கடிக்க, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளை உள்ளடக்கிய பருத்திப் பாதை திட்டத்தை உருவாக்க இந்தியாவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ராஜபக்ச பதுக்கியுள்ள 2 பில்லியன் டொலரை கண்டுபிடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் உதவி

டுபாயில் உள்ள வங்கியில் ராஜபக்ச குடும்பத்தினரால் வைப்பிலிடப்பட்டுள்ள 2 பில்லியன் டொலர் பணம் தொடர்பான விசாரணைக்கு, இந்தியாவும் அமெரிக்காவும் உதவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் சீன இராணுவத் தளம் இல்லை – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்

சிறிலங்கா, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.