மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார் – அப்பல்லோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வயது-68)  காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில்  சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை; மரணமானதாக வெளியான செய்தி தவறு – அப்பல்லோ அறிக்கை

தமி்ழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் உயிர்காப்பு மருத்துவ கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்று சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா உடல்நிலை மோசம் – தமிழ்நாட்டில் பதற்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்தும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவலைக்கிடமான நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா – அப்பல்லோ அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச்சிகிச்சை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சதீவு புதிய தேவாலயத் திறப்புவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று, மீனவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் இன்குலாப் சென்னையில் காலமானார்

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார்.

ராஜீவ் கொலை பின்னணியை விபரிக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய  “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்”  என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.

திருச்சி வழியாக கொழும்பு திரும்பும் சிறிலங்கா அதிபர் – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவின் கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திருச்சி வழியாக கொழும்பு திரும்பவுள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.