மேலும்

செய்தியாளர்: ஐரோப்பியச் செய்தியாளர்

வெளிநாட்டு, கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை – தீர்மான வரைவில் மாற்றம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், கூடிய நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திருத்தப்பட்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

இரண்டாவது தீர்மான வரைவை இன்று பேரவையில் சமர்ப்பிக்கிறது அமெரிக்கா

அமெரிக்கா தயாரித்துள்ள இரண்டாவது வரைவுத் தீர்மானம் குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அந்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தீர்மான வரைவு இன்று வெளியாகும்- வெள்ளியன்று மீண்டும் கலந்துரையாடல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மான வரைவு அடுத்த வாரமே சமர்ப்பிக்கப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்மான வரைவின் 4ஆவது பந்தி குறித்து ஜெனிவாவில் கடும் விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில் இருந்து, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யும், 4ஆவது பந்தியை நீக்க வேண்டும் என்று ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் நேற்றும் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க தீர்மான வரைவில் 14 பந்திகளை நீக்குமாறு கோருகிறது சிறிலங்கா

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரை உள்ளிட்ட, 14 பந்திகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

இரண்டுபட்ட நிலையில் அனைத்துலக சமூகம் – ஜெனிவா கூட்டத்தில் நடந்தது என்ன?

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவுக்கு எதிராக – சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,  கியூபா ஆகிய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் தீர்மான வரைவை ஜெனிவாவில் சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தீர்மான வரைவு குறித்து ஜெனிவாவில் இன்றும் நாளையும் கூட்டங்களை நடத்துகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவு தொடர்பாக, இன்றும் நாளையும் ஜெனிவாவில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ஜெனிவாவில் ஆதரவு திரட்டும் அமெரிக்கா – அதுல் கெசாப்பும் ஜெனிவா விரைவு

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு, உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜெனிவாவில் முக்கிய திருப்பம் – அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ரஸ்யா, சீனாவும் ஆதரவு?

ஜெனிவாவில் முக்கிய திருப்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா கொண்டு வரவுள்ள, சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளும் ஆதரவளிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.