மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கோத்தாவின் வசம் இருந்த 3322 துப்பாக்கிகளைக் காணவில்லை – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து, 3322 ஆயுதங்கள் காணாமற்போயுள்ளது குறித்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு அடம்

ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார்.

தமிழர் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க முன்வர வேண்டும் – இரா. சம்பந்தன் கோரிக்கை

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையை அவசர விடயமாகக் கருதி தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – நாடாளுமன்றத்தில் ரணில்

புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீறல்கள் குறித்து வெளியார் எவரும் விசாரிக்க முடியாது – என்கிறார் ரணில்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால், நாட்டில்இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியார் தலையீடு செய்து விசாரணை செய்ய முடியாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னனிடம் மாதம் 1 கோடி ரூபா கப்பம் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிர்ப்பு

சிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார்

வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா

சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.