மேலும்

செய்தியாளர்: மட்டக்களப்புச் செய்தியாளர்

விக்கி தலைமையில் தமிழர்களுக்கு புதிய தலைமைத்துவம் தேவை – என்கிறார் சுரேஸ்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது என்று,  ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே ‘எழுக தமிழ்’ – விக்னேஸ்வரன்

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் இன்று, ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், ‘எழுக தமிழ்’ நிகழ்வு பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் நிகழ்வு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய மட்டு. விகாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு, மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

பொது பலசேனாவுக்கு மட்டக்களப்பில் நுழைய தடை – நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரர்

மட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவைக் கிழித்தெறிந்த, கலகொடஅத்தே ஞானசார தேரர், பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், தம்மை மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் தடுப்பது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மாணிக்க மடு புத்தர் சிலையை அகற்ற பௌத்த பிக்குகள் மறுப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் புதிய அரசியலமைப்பு – பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படும்

இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு யோசனை, தொடர்பாக மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

‘வடக்கு கிழக்கை இணைக்கக்கூடாது’ – கிழக்கு முஸ்லிம் சிவில் சமூகம்

புதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிரும் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.