கணக்காய்வாளர் நாயகமாக சிறிலங்கா படையதிகாரி- அனுரவின் பரிந்துரை நிராகரிப்பு
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரையை, அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் நேற்று கூடிய அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில், இந்த பரிந்துரையை நிராகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பதவிக்கு, இதற்கு முன்னர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரைத்தவர்களையும், அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
படை அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்குள் கொண்டு வரும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
