மேலும்

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர்

வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில், பிஎஸ்எம் சார்ள்ஸ், நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் இன்று யாழ்ப்பாணம் சென்று, நாளை ஆளுநர் செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *