மேலும்

வடக்கு, கிழக்கு வரலாற்று இடங்களில் ஆய்வு நடத்தவுள்ள புத்தசாசன அமைச்சு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பௌத்த சாசன மற்றும் கலாசார  விவகாரங்களுக்கான அமைச்சரின் உத்தரவுக்கு அமைய, தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாக இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆலயங்களின் அமைவிடம், வரலாறு, மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளது.

இவ்வாறான இடங்களில் ஏதாவது அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *