இன்று 3 பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்தாகும்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்படும் 3 முக்கிய உடன்பாடுகளின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவம் மேலும் வலுப்படுத்தப்படும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
