காலிக்கு அப்பால் ஒரு மாதமாக தவம் கிடக்கும் 17 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்
ஈரானின் 17 எண்ணெய் தாங்கி கப்பல்கள், காலி கடற்கரைக்கு அப்பால் சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்குள் சுமார் ஒரு மாதமாக நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் 17 எண்ணெய் தாங்கி கப்பல்கள், காலி கடற்கரைக்கு அப்பால் சிறிலங்காவின் பொருளாதார கடல் எல்லைக்குள் சுமார் ஒரு மாதமாக நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம், மூன்று ஈரானியக் கப்பல்களான ஐஆர்ஐஎஸ் டேனா, ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் ஐஆர்ஐஎஸ் லாவன் ஆகியவற்றை நல்லெண்ணப் பயணத்திற்காக, அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தது என்று, சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.