20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களை தள்ளிப் போடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் முடிவு செய்துள்ளனர். கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை, முடிவுக்குக் கொண்டு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சபையை சுமுகமான முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்க எடுக்கும் நகர்வு வெறும் கனவு மட்டுமே என்றும், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சி.தவராசாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருக்கு, ஈபிடிபியின் பொதுச்செயலரான டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் முன்வைத்துள்ள கிராம இராஜ்ஜியத் திட்டம் மற்றொரு அதிகாரப் பறிப்பு முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.