மேலும்

Tag Archives: புதைகுழி

மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான, றேடியோ கார்பன் அறிக்கை அதிகாரபூர்வமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று, நீதிவான் சரவணராஜா தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையே வெளியாகும் மன்னார் புதைகுழி இரகசியம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட றேடியோ கார்பன் பரிசோதனை  அறிக்கை வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் புதைகுழி எலும்புக் கூடுகள் – கால ஆய்வு அறிக்கை தாமதம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டறிவதற்கான சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழியில் மேலும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் – புதைகுழியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் கண்டுபிடிக்கபட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன.

மன்னார் புதைகுழியில் இதுவரை 38 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மைதானப் புதைகுழியில் இதுவரை 10 எலும்புக்கூடுகள் மீட்பு

திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

புதிய கூட்டணியிலேயே போட்டியிடுவார் மகிந்த – பசில் ராஜபக்ச தெரிவிப்பு

புதிய கூட்டணி ஒன்றிலேயே சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் காட்டில் புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம் – சாம்பல் மட்டுமே கிடைத்தது

முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி கப்டன் லக்கி உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அகழும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.