இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றில் சம்பந்தன்
சபாநாயகர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
