மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

கோத்தாவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு – ஜூலை 12இல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு ஜூலை 12ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சீனாவின் சிந்தனைகள் குறித்து மகிந்தவிடம் விசாரித்தார் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனாவின் சிந்தனைகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார் என்று கூறப்படுகிறது.

கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும்,  கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருந்ததா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை, சரணடைந்ததை யாரும் காணவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத-  கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மகிந்த தரப்புடன் சீன குழு இரண்டு சுற்றுப் பேச்சு – கோத்தாவும் பங்கேற்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

பதற்றத்தில் கோத்தா – சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறித்த சோதிடர் விஜித றோகண கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட சோதிடர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய்பபட்டார்.

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவின் தேசப்பற்று மிக் விசாரணையில் அம்பலமாகும் – ராஜித சேனாரத்ன

சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக். கொள்வனவு பற்றிய விசாரணைகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எத்தகையவர் என்பதை அம்பலப்படுத்தும் என்று சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.