மேலும்

Tag Archives: புலனாய்வு

கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல்

கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

‘நேவி சம்பத்’தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு

11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை – புலனாய்வு அதிகாரிகள் தகவல்

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே,  வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் குறித்த மேற்குலக நிலைப்பாடுகளை சிறிலங்கா, மலேசிய தலைவர்கள் கூட்டாக நிராகரிப்பு

இராணுவப் பயிற்சி, புலனாய்வுப் பரிமாற்றங்கள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு மலேசியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் இணக்கம் கண்டுள்ளனர்.

ஊடகங்களைப் பழிசொல்வது நியாயமா?

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் யுனெஸ்கோ நிறுவனத்தால் கடந்த வாரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  செய்தி சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களுடன் சில ஊடக நிறுவனங்களும் மூத்த ஊடகவியலாளர்களும் இணைந்து இரகசிய சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

கொழும்பில் அனைத்துலக புலனாய்வு அதிகாரிகளின் கருத்தரங்கு

அனைத்துலக காவல்துறையின்( இன்ரபோல்)  புலனாய்வு அதிகாரிகளுக்கான கருத்தரங்கு ஒன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பில் சிறிலங்கா மருத்துவர்கள் – திடுக்கிடும் காணொளி

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.