மேலும்

பிரிவு: செய்திகள்

மீண்டும் பீஜிங் செல்கிறார் சிறிலங்கா அதிபர் – சீன அதிபரிடம் இருந்து அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக ஆராய்வதற்கு, உண்மை, நீதி, மற்றும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கடன் நெருக்கடி – அனைத்துலக ஊடகம்

ஏற்கனவே பல பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து கடன்பெற்ற சிறிலங்கா கடந்த மாதம் அனைத்துலக நாணய நிதியத்திடம் 1.5 பில்லியன் டொலர் நிதி தருமாறு உதவி கோரியது.

சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார் மகிந்தவின் பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. 

கிழக்கு முதல்வரை விருந்துக்கு அழைத்த சிறிலங்கா கடற்படை

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த மதியபோசன விருந்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொண்டார்.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 முன்னாள் விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேர், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மோடி வாக்குறுதி அளித்தபோதும் இன்னமும் பேச்சுக்கள் தொடங்கவில்லை

சம்பூரில் திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில் எந்தப் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் சிங்களவர்கள், முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அமைச்சர்கள் மட்டக்குழு

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் குறித்த 3000 முறைப்பாடுகளை குப்பைக்குள் வீசியது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3000 முறைப்பாடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.