மேலும்

பிரிவு: செய்திகள்

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

லசந்த, பிரகீத் கொலைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாயம் – சிறிலங்கா இராணுவம் கைவிரிப்பு

ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரும் கம்மன்பிலவின் மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான, உதய கம்மன்பில, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதிப்போரில் வீசப்பட்ட கொத்தணிக் குண்டுகள் – ஒளிப்படங்களை வெளியிட்டது பிரித்தானிய ஊடகம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படைகளால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கிடைத்திருப்பதாக, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

முஸம்மிலுக்கு விளக்கமறியல் – அடுத்தடுத்து சிறை செல்லும் மகிந்த அணியினர்

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகமட் முஸம்மில் இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதித்தால் ஆபத்தாக அமையும் – சரத் பொன்சேகா

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிவிபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறிய சம்பவத்தில், தீவிரவாத தொடர்பு அல்லது சதி ஏதும் இருந்ததாக விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும், எனினும், இத்தகைய வாய்ப்புகளை நிராகரிப்பதற்கில்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

படுகொலைகளில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு, சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார்.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா

இனப்பிரச்சினை மற்றும் ஆட்சி விவகாரம் போன்ற எந்த விடயங்களிலும் இதுவரை கண்ணை மூடி அமைதி காக்கும் கோட்பாட்டைப் பின்பற்றி வந்த சீனா,  தற்போது சிறிலங்காவின் உள்விவகாரங்கள் தொடர்பாகக் கருத்துக்களைக் கூறத் தொடங்கியுள்ளது.