மேலும்

செய்தியாளர்: Vanni

முன்னாள் போராளிகள் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

11 கிராம அதிகாரிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பினார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, குடும்ப உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அதிகாரிகள் 11பேரை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு குறித்து நாளை இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

வடக்கு படைத்தளங்களில் சிறிலங்காவின் புதிய இராஜதந்திரிகள்

வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.

20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

தேர்தல்முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்ட யோசனை, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை ஒருபோதும், ஆதரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது.

ஓமந்தையில் 14வயதுச் சிறுமி மர்ம மரணம் – வடக்கில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தை அருகே உள்ள வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமி, நேற்றுமாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வித்தியா கொலையைக் கண்டித்து கடையடைப்பு- முற்றாக முடங்கியது வவுனியா

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரியும், வவுனியா மாவட்டத்தில் இன்று முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினர் சுட்டுக்கொலை

வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு பிரச்சினையை தீர்க்க சிறப்புக் குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள காணிகளில், இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக குழுவொன்றை அமைத்து, உரிய தீர்வு காணப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.