மேலும்

செய்தியாளர்: Vanni

கிளிநொச்சியில் நேற்றிரவு பதற்றம் – வீதியில் ரயர்கள் எரிப்பு

கிளிநொச்சியில் நேற்றிரவு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தினால், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், பதற்றமான நிலை காணப்பட்டது.

போத்தலால் குத்தப்பட்டு சிறிலங்கா காவல்துறை அதிகாரி காயம் – கிளிநொச்சியில் பதற்றம்

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் மரணம்

வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று காலை மாரடைப்பினால் மரணமானார். இன்று காலை அவர் முல்லைத்தீவில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை

வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை முட்டாளாக்க முயன்று நீதிபதியிடம் வாங்கிக்கட்டினார் 58 ஆவது டிவிசன் தளபதி

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை முல்லைத்தீவு நீதிவான் கடிந்து கொண்டார்.

வடக்கில் சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் மாத்திரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

வவுனியாவில் சிங்களக் குடியேற்றக் கிராமமான போகஸ்வெவவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.

சிதம்பரபுரம் நலன்புரி முகாமில் இருந்த 194 பேருக்கு காணி உரிமைப் பத்திரங்கள்

சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாமில் இருந்த 194 குடும்பங்களுக்கு, நாளை தற்காலிக காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

காணாமற்போனவர்களில் மூவர் மாலைதீவு சிறையில் – பரணகம ஆணைக்குழு கண்டுபிடிப்பு

காணாமற்போனவர்களில் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.