மேலும்

செய்தியாளர்: Vanni

வன்னிப் படைகளின் தலைமையக தளபதியின் இடமாற்றம் திடீரென ரத்து

சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கொட்டும் பெருமழை – நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்

தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவுக்கு சிங்கள அரச அதிபர் – சிறிலங்கா அரசு வாக்குறுதியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ்ப்பேசும் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுகிறார் மன்னார் ஆயர்

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். இந்த தகவலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்டர் சோசை அடிகளார் வெளியிட்டுள்ளார்.

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள், 10 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றதுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், மொத்தம் 28 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆசனங்களைக் குறிவைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி சார்பில் 23 பேர் போட்டி- அதிகாரபூர்வமாக அறிவித்தார் சம்பந்தன்

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களிலும் உள்ள, 29 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 44 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தவுள்ளது.

கூட்டமைப்பில் சுமுகமான முறையில் ஆசனப்பங்கீடு – 24 வேட்பாளர்களை நிறுத்துகிறது தமிழரசுக் கட்சி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுக்களில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.