மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறது செஞ்சிலுவை சங்கம்

இந்தியாவின் வீடமைப்பு திட்ட உதவி நிதியைப் பெறுவதற்கு, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியதாக, முழங்காவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சிறிலங்கா செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் படைத்தளபதிகளிடம் விசாரணை – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய சிறிலங்காவின் படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த அதிபர் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – விசாரணைகள் நிறைவு

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தூதரகமும், சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

பொருளாதார முதலீடுகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் ரணில் பேச்சு

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டின் பிரதமர் லீ சென் லூங் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

விசாரணைப் பொறிமுறை குறித்து ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

மகிந்தவின் எதிர்ப்பினால் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.

மகிந்தவிடம் இன்று விசாரணை – கைது செய்யப்படக் கூடும் என்று பரவலாக வதந்தி

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து  விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர்.  திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதே சிறிலங்கா அரசின் பிரதான இலக்காம்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.