மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் தடுத்து வைக்கப்படவில்லையாம் – சிறிலங்கா கூறுகிறது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்கும் உடன்பாடு ஜனவரியில் கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

சிறிலங்கா புலனாய்வு தலைவரை ஐ.நா குழு விசாரிக்க வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை

ஜெனிவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவில் சார்பில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

வட,கிழக்கின் முன்னாள் இராணுவ ஆளுனர்கள் எழுதிய நூலை வெளியிட்டார் மகிந்த

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுனர்களாக இருந்த முன்னாள் படை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மற்றும் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம ஆகியோர் இணைந்து எழுதிய நூலை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டு வைத்தார்.

ஆவா குழு சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றியவர் – ஒப்புக்கொண்டது அரசாங்கம்

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்களில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிஓடிய ஒருவரும் உள்ளடங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

காணாமற்போனோர் செயலகம் ஜனவரி 1 இல் செயற்படத் தொடங்கும்

காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் – உதய கம்மன்பில

அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, சிறிலங்காவை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் சிறிலங்கா கடற்படை ஈட்டிக் கொடுத்த 2.33 பில்லியன் ரூபா வருமானம்

வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சேவையை பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில், சிறிலங்கா கடற்படை 2.33 பில்லியன் ரூபாவை வருமானத்தைப் பெற்றிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூறுகிறார் கோத்தா

தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.