மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா

இந்தியாவுடன் பொருளாதாரத் திட்டங்கள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா இந்த ஆண்டில் கையெழுத்திடவுள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு

தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்காவுக்கு 3000 மெட்றிக் தொன் அரிசியுடன் 3 கப்பல்களை அனுப்பியது பாகிஸ்தான்

வரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன. சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் மாகாணசபை தேர்தல் – சிறிலங்கா அதிபரின் யோசனை முதலமைச்சர்களால் நிராகரிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.

அமைச்சுக்கள் தொடர்பில் இணக்கமில்லை – அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைப்பு

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறிகள் காணப்படுவதால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ சிறிலங்கா அரசு இடமளியாது – மகிந்த சமரசிங்க

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

காசு கொடுத்த பின் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணக்கம்

ஐந்து மில்லியன் ரூபாவைக் கொடுத்த பின்னர், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் சிறிலங்கா படையினர் வசமுள்ள 468 ஏக்கர் காணிகளை விடுவிக்க, பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை  கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.

கீத் நொயார் கடத்தல் – 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.