மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஐதேக அதிபர் வேட்பாளர் – நாளை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார்,  கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நால்வர் குழுவை அமைத்துள்ளது.

ஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு

அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும்,  ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினியை கைப்பற்றிய மைத்திரிக்கு ருவன் காட்டமான கடிதம்

சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், கொண்டு வந்திருப்பதற்கு, பாதுகாப்பு இராஜாங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு

அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி – சிறிலங்கா அதிபர் அதிரடி

சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தை, நேற்று நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வந்துள்ளார்.

நாளை நடக்குமா ரணில்- சஜித் சந்திப்பு?

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

‘மொட்டு’ க்கு செக் வைக்கும் ‘கை’ – கோத்தாவை ஆதரிக்க நிபந்தனை 

மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும், கை அல்லது வேறு சின்னத்தில் போட்டியிட்டாலேயே அவருக்கு ஆதரவு அளிக்க முடியும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

வெளிநாடுகளிடமுள்ள பொருளாதார கேந்திரங்களை மீட்போம் – கோத்தா

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிறிலங்காவின்  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணில் – சஜித் தனியாகச் சந்தித்துப் பேச முடிவு

அதிபர் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதி  தலைவர் சஜித் பிரேமதாசவும் நாளை தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளனர்.