புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக?
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 25ஆம் நாள்- புதன்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 25ஆம் நாள்- புதன்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான முயற்சிகள் நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் தோற்கடிக்கப்பட்டமை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் நேற்றிரவு சந்தித்து, நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை சந்தித்துப் பேசவுள்ளனர்.
அரசியலமைப்பு சபையில், எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு கட்சிக்குத் தாவிச் சென்று அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக- நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் காலஎல்லை அடங்கிய சிறப்பு அரசிதழ் அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.