மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

ஒக்ரோபர் 15இல் பலாலி விமான நிலையம் திறப்பு – இன்றைய கூட்டத்தில் முடிவு

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்த திறப்பு விழா நிகழ்வை அடுத்து. இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

இராணுவத்தின் பாதுகாப்பு ஒழுங்குகளில் மாற்றம் இல்லை

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவையின் அடிப்படையில், சிறிலங்கா இராணுவம் தற்போது மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பலாலிக்கான விமான சேவை – இந்தியாவின் ‘அலையன்ஸ் எயர்’ ஆர்வம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் அலையன்ஸ் எயர் நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரம் – அமெரிக்காவின் நிலைப்பாடே அது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கிலானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் குடியுரிமை – பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா சீற்றம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான முடிவு இன்று சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.