சிறிலங்காவின் முதல் ‘செல்பி’
சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பலாலி விமான நிலையத்தில் இருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்து சங்கம் (IATA) அனுமதி அளித்துள்ளது சிறிலங்கா சிவில் விமான சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு-திட்டமிட்டபடி நாளை மறுநாள் திங்கட்கிழமை நடக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, தமது பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நவீனமயப்படுத்தும், பல பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான மக்களின் விருப்பத்தை சிறிலங்காவின் அரசியல் தலைவர்களை நிராகரிக்கக் கூடாது என, சுதந்திரமான ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூல் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், ஐந்து மணி நேரம் இரகசிய இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.
தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.