மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் விழா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் ஏப்ரல் 22ம் நாள் சனிக்கிழமை ரொறோன்ரோவில் உள்ள ஸ்காபொரோ மாநாட்டு நிலையத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு – கூட்டமைப்பு அதிர்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

நிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி

சிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 : போட்டி முடிவுகள்

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக, காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 போட்டியில், புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது – உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது என்று  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைமாறும் உலகில் – மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் நோக்கிய அரசியல்

உலகில் அனைத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பொதுவான வர்ணனைச் சொற்பதம் கொண்டு மேலை நாடுகளால் அழைக்கப்படுகிறது, அது தான் மென்மையான அரசுகள் (Fragile States ). தமது சொந்த மக்களுக்கே அடிப்படை அளவிலான சேவையையும் பாதுகாப்பையும் கொடுக்க கூடிய வலிமையற்ற அரசுகளாக அவை காணப்படுவதாலேயே இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.

சிறிலங்காவின் தோல்விக்கு வளைந்து கொடுக்காத இனநாயகமே காரணம் – உருத்திரகுமாரன்

ஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.

கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..! புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.