மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன்

மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள்.

‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

சீன நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றன- சிறிலங்கா குற்றச்சாட்டு

சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் முன்னாள் அதிபரால் கைச்சாத்திடப்பட்ட 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் சமரசப் பேச்சுக்களை நடத்துவார் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார்.

மாநிலஅரசு பரிந்துரை செய்தால் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை – இந்திய அமைச்சர் தெரிவிப்பு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் பரிந்துரை செய்தால், அதுகுறித்து இந்திய மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்யும் என இந்திய மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

இவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

மோடியின் சிறிலங்கா பயணம் – சீன ஆய்வாளரின் பார்வை

ஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.

புதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி – ஆங்கில ஊடகம்

தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

றோவும் ராஜபக்சவும் – ஒரு முன்னாள் இந்திய ஊடகவியலாளரின் பார்வை

ராஜபக்ச தொடர்பில் இந்தியா விழிப்புணர்வுடன் இருப்பதே விவேகமானது. பங்களாதேசில் ஷேக் ஹசினாவிடம், பேகம் கலீடா சியா தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் சியாவை இந்தியா கருத்திலெடுக்கவில்லை. இதே தவறை மீண்டும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா மேற்கொள்ளக்கூடாது.

“வடக்கு, கிழக்கை தவறாக கணித்து விட்டேன்” – ‘தி ஹிந்து’வுக்கு மகிந்த அளித்த செவ்வியின் முழுவடிவம்

“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர். ஆனால் இத்தடவை 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது எப்படி என்பது எனக்குத் தெரியாது.”