மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26ஆம் நாள் கொல்லப்படுவாரா சிறிலங்கா அதிபர்? – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரணவிலவில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா – அந்த இடத்தைப் பிடிக்க சீனா முயற்சி

இரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் – சிறிலங்கா அரசு அனுமதி

காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

குறிபார்த்துச் சுடும் சீனர் கொழும்பில் கைது – முக்கிய பிரமுகரை கொல்லும் சதித் திட்டம்?

குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி – தேஜஸ் போர் விமானங்களை ஆய்வு செய்வார்?

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் – சிவ்சங்கர் மேனன்

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்

அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.