மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.

சீனாவுடன் பல்வேறு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் ரணில்

அடுத்தவாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது, சீன அதிகாரிகளுடன் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடும் என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இனி அடுத்தடுத்து கொழும்பு வரும் – அமெரிக்கத் தூதுவர் சூசகம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்களின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா அதிபர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள சிறிலங்கா கடற்படை

சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லியில் தாக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்ட ஜே.ஆர் – காவல்துறை அதிகாரி தகவல்

கொழும்பில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவரால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட பின்னர், புதுடெல்லியில் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் அதுபோன்றதொரு தாக்குதலை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் அதிகாரி நிமால் லெகே.

கடற்புலிகளின் கண்ணிவெடியை ஆய்வு செய்த அமெரிக்க கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைத் தளபதியான வைஸ்அட்மிரல் ஜோசப் ஓகொயின் இன்று கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ரணிலின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க சிறிலங்கா அதிகாரி பீஜிங் விரைவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தது அமெரிக்க கட்டளைக் கப்பல்

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியைச் சேர்ந்த கட்டளைக் கப்பலான் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் ஆறுநாள் பயணமாக இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.